Home செய்திகள் உயிரை மாய்த்து கொண்ட கர்ப்பிணி… தாய் அளித்த பரபரப்பு புகார்… கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு…!!

உயிரை மாய்த்து கொண்ட கர்ப்பிணி… தாய் அளித்த பரபரப்பு புகார்… கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு…!!

by Revathy Anish
0 comment

சேலம் மாவட்டம் சின்னபுனல்வாசல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரதீஸ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த கவியரசி என்பவருடன் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது கவியரசி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கவியரசிக்கும் அவரது கணவர் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மறுநாள் காலையில் கவியரசி வெகுநேரம் ஆகியும் அறையில் இருந்து வெளியே வராததால் அவரது கணவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கவியரசி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவியரசி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வரதட்சணை கேட்டு பிரதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை படுத்தியதால் என் மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் அருந்ததி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பிரதீஷ்குமார், அவரது தாயார் தங்கமணி, சகோதரி பிரதீபா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.