62
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடுயூபர் சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலைச்சர் மு. கருணாநிதி குறித்து அவதூறாகவும், தமிழக அரசு பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து அவர் தென்காசி மாவட்டம் குற்றத்தில் தங்கியிருப்பது தெரியவந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.