Home செய்திகள் தண்டவாளத்தில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளிகள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பரிதாபம்…!!

தண்டவாளத்தில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளிகள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பரிதாபம்…!!

by Revathy Anish
0 comment

மதுரை மாவட்டம் புளியங்குளம் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிக்கு உத்திரபிரதேசம் கோராக்பூரை சேர்ந்த மதுசூதனன் பிரஜாப்தி(30), கியானந்த பிரதாப் கவுத்(22) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். சம்பவத்தன்று இவர்களுக்கு விடுமுறை என்பதால் அப்பகுதியில் இருந்த ரயில்வே தண்டவாளத்தில் ஏறி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மதுரையில் இருந்து மானாமதுரை நோக்கி ரயில் தண்டவாள ஆய்விற்க்காக ரயில் எஞ்சின் மட்டும் சோதனைக்காக வந்தது. இந்நிலையில் வாலிபர்கள் நடந்து செல்வதை பார்த்த எஞ்சின் டிரைவர் ஒலி எழுப்பினார். ஆனால் வடமாநில இளைஞர் அங்கிருந்து செல்வதற்குள் எஞ்சின் அவர்கள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் மதுசூதனன் பிரஜாப்தி, கியானந்த பிரதாப் கவுத் இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.