Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்கடலூர் வீராணம் ஏரி நீரை பயன்படுத்த முடியாமல் அவதி… விரைந்து செயல்பட கோரிக்கை… பொதுமக்கள் அச்சம்…!!

வீராணம் ஏரி நீரை பயன்படுத்த முடியாமல் அவதி… விரைந்து செயல்பட கோரிக்கை… பொதுமக்கள் அச்சம்…!!

by Revathy Anish
0 comment

கடலூர் மாவட்டம் பூதங்குடி வீனஸ் மதகு பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 5 கி.மீ, பரப்பளவும், 14 கி.மீ. நீளமும் கொண்டுள்ளது. இந்த ஏரியின் மூலம் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், ஆயிரக்கணக்கான விளை நிலங்களுக்கு பாசன வசதிக்கும் முக்கியமாக விளங்குகிறது.

இந்நிலையில் தற்போது ஏரிக்கு வரும் தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுவதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இதனையடுத்து நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரி நீரை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் விளக்கம் நீர்வளத்துறையிடம் கேட்டுள்ளனர்.

மேலும் தண்ணீர் பச்சை நிறத்தில் இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தவும், விவசாயிகள் பாசன வசதிக்கு பயன்படுத்தவும் அச்சமடைந்துள்ளனர். ஆகவே நீரின் நிறம் மாற்றத்திற்க்கான காரணத்தை உடனே கண்டறிந்து அதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.