Home செய்திகள் மூதாட்டி கழுத்தறுத்து கொலை… 2 பேர் அதிரடி கைது… நெல்லை அருகே பரபரப்பு…!!

மூதாட்டி கழுத்தறுத்து கொலை… 2 பேர் அதிரடி கைது… நெல்லை அருகே பரபரப்பு…!!

by Revathy Anish
0 comment

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள புலவன் குடியிருப்பு பகுதியில் பொன்னம்மாள்(75) என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், மகள்கள் 4 பேர் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி பொன்னம்மாள் சேரன்மகாதேவி அருகே உள்ள காருக்குறிச்சியில் இருக்கும் அவரது தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அவரை சிலர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். தகவலறிந்த சேரன்மகாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொன்னம்மாளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி 2 பேரை உடனடியாக கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் கொலை செய்ததற்கான காரணம் குறித்தும், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.