Home » அடுக்குமாடி கட்டிடத்தில் துர்நாற்றம்…. பிரபல நடிகையின் சடலம் மீட்பு…. திரை உலகில் பரபரப்பு….!!

அடுக்குமாடி கட்டிடத்தில் துர்நாற்றம்…. பிரபல நடிகையின் சடலம் மீட்பு…. திரை உலகில் பரபரப்பு….!!

by Gayathri Poomani
0 comment

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த  நூர் மலபிகா தாஸ் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் திரை உலகில் பிரபலமாக திகழ்ந்து வந்த இந்தி நடிகை, சிஸ்கியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்துள்ளார். அதன்பின் ஜகன்யா உபயா, வால்க் மென், டெக்கி சாந்தி என பல வெப் தொடர்களில் நடித்து வந்துள்ளார். பின்னர் நடிகை கஜோல் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான தி டிரையல் வெப் தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் நூர் சினிமா திரை உலகிற்கு வருவதற்கு முன்பாக கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார்.

இதனை அடுத்து நூர் மலபிகா தாஸ் வசித்து வந்த வீடு கடந்த சில தினங்களாக பூட்டி இருந்த நிலையில் தற்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு நடிகை நூர் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் அவரது உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு பின்னர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நடிகை மலபிகா தற்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.