கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் ஒரே இடத்தில் படுத்திருந்த 12 அடி ராஜ நாகம்… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!! Revathy Anish22 July 2024049 views கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதி அருகில் உள்ள பாலப்பட்டி கிராமத்தில் ராஜநாகம் ஒன்று படுத்து கிடந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த ராஜ ராகம் ஊர்ந்து செல்ல முடியாமல் ஒரே இடத்தில் இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடிக்கும் வீரர்களின் உதவியுடன் அந்த ராஜ நாகத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகத்தை பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது ராஜ நாகம் இன சேர்க்கையில் ஈடுபட்டால் இதுபோல் சோர்வுடன் ஒரே இடத்தில் படுத்து இருக்கும் என தெரிவித்தனர்.