Home செய்திகள் நேருக்கு நேர் மோதிய லாரி-பைக்… கோர விபத்தில் காதல் ஜோடி பலி… நான்குநேரியில் பரபரப்பு…!!

நேருக்கு நேர் மோதிய லாரி-பைக்… கோர விபத்தில் காதல் ஜோடி பலி… நான்குநேரியில் பரபரப்பு…!!

by Revathy Anish
0 comment

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கடம்போடு வாழ்வு பகுதியில் சாலமன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழவூர் பகுதியை சேர்ந்த மதுமிதா(19) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் சம்பவத்தன்று இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் நான்குநேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திருப்பியுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே உள்ள சாலையில் தவறுதலாக எதிர்புற சாலையில் சென்றனர். அப்போது கேரளாவில் இருந்து தூத்துக்குடி நோக்கி மீன் கழிவுகளை ஏற்றி கொண்டு வந்த லாரி இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சாலமன் மற்றும் மதுமிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி கூடுதல் சூப்பிரண்டு போலீஸ் பிரசன்ன குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவருடைய உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.