Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்ஈரோடு சாலையை கடக்க முயன்ற நபர்… இருசக்கர வாகனம் மோதியதால் விபரீதம்… வைரலாகும் வீடியோ…!!

சாலையை கடக்க முயன்ற நபர்… இருசக்கர வாகனம் மோதியதால் விபரீதம்… வைரலாகும் வீடியோ…!!

by Revathy Anish
0 comment

ஈரோடு மாவட்டம் முருகன் புதூர் பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் பஜனை கோவில் பேருந்து நிலையத்தில் தன் மகனை பேருந்து ஏற்றி வைத்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனம் அர்ஜுனன் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அர்ஜுனனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த சேகர் என்பவரும் காயமடைந்ததால் அவர் தொடர்ந்து சிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்து நடக்கும் இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியான நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.