உயிரை மாய்த்து கொண்ட கர்ப்பிணி… தாய் அளித்த பரபரப்பு புகார்… கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு…!!

சேலம் மாவட்டம் சின்னபுனல்வாசல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரதீஸ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த கவியரசி என்பவருடன் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது கவியரசி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கவியரசிக்கும் அவரது கணவர் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மறுநாள் காலையில் கவியரசி வெகுநேரம் ஆகியும் அறையில் இருந்து வெளியே வராததால் அவரது கணவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கவியரசி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவியரசி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வரதட்சணை கேட்டு பிரதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை படுத்தியதால் என் மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் அருந்ததி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பிரதீஷ்குமார், அவரது தாயார் தங்கமணி, சகோதரி பிரதீபா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!