Home » சினிமாவை மிஞ்சிய டிவிஸ்ட்… திருமணமான நாளிலேயே கைது… காதல் மனைவி வேதனை…!!

சினிமாவை மிஞ்சிய டிவிஸ்ட்… திருமணமான நாளிலேயே கைது… காதல் மனைவி வேதனை…!!

by Revathy Anish
0 comment

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்த வசந்த் என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் வசந்த் மற்றும் அந்த பெண் வட மதுரையில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இதனை அடுத்து பெண் வீட்டாரை தங்களை பிரித்து விடுவார்கள் என நினைத்த வசந்த் உடனடியாக வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர்கள் செல்லும் வழியில் திடீரென காரில் வந்த நபர்கள் வழிமறித்து வசந்தை கைது செய்து வடமதுரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனை பார்த்த கல்லூரி மாணவி உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று வசந்தை கைது செய்த காரணத்தை கேட்டார். அப்போது காவல்துறையினர் விருதுநகரில் ஒரு இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு வசந்த் தலைமறைவானதும் அவரை பிடிப்பதற்கு விருதுநகர் குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடி வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் வசந்த் வடமதுரையில் இருப்பது தெரிந்ததால் அவரை போலீசார் மப்டியில் வந்து கைது செய்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த கல்லூரி மாணவியை காவல்துறையினர் ஆறுதல் கூறி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.