ஆடி பெருந்திருவிழா… கள்ளழகர் கோவிலில் தேரோட்டம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!!

108 வைணவ தலங்களில் ஒன்றான மதுரை மாவட்டத்தில் இருக்கும் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் மிகவும் பிரசித்தி நிகழ்வாக ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13 -ஆம் தேதி கொடியை ஏற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் கள்ளழகர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். மேலும் நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 23ஆம் தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த திருவிழா ஆகஸ்ட் 4-ஆம் தேதி நிறைவு பெறுவதாக கோவில் நிர்வாகமும், அரங்காவலர் குழுவும் தெரிவித்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!