பலருடன் கள்ளத்தொடர்பு… கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… மனைவி அதிரடி கைது…!!

சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் பகுதியில் வசித்து வந்த கவுஷா பாஷா(48) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினனார்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் கவுஷா பாஷாவின் உடலை மீட்டு உடற்கூறாவிற்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையில் கவுஷா பாஷா கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் அவரது மனைவி ஷாஜிதா பானுவிடம் சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ஷாஜிதா பானு பலருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை கணவன் கவுஷா பாஷா கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த சாஜிதா பானு, தூங்கிக் கொண்டிருக்கும்போது கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்பு எதுவும் நடக்காதது போல் கவுஷா பாஷா உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக கூறி நாடகம் ஆடியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜிதா பானுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!