Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்ஈரோடு பல ஆண்களுடன் பழக்கம்… பெண்கள் சேர்ந்து நடத்திய மோசடி… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!

பல ஆண்களுடன் பழக்கம்… பெண்கள் சேர்ந்து நடத்திய மோசடி… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!

by Revathy Anish
0 comment

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சத்யா(30) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் மகேஷ் அரவிந்தின் பெற்றோர் சத்யாவிற்கு நகை, புடவை ஆகியவற்றை வாங்கி கொடுத்து நன்றாக பார்த்து கொண்டனர்.

இதனையடுத்து மகேஷ் அரவிந்தின் பெற்றோர் சத்யாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றனர். அப்போது கொடுமுடி பகுதியில் சத்யா குறித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. சத்யா ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளையின் பெற்றோர் உடனடியாக சத்யாவை நைசாக அழைத்து கொண்டு மகளிர் காவல்நிலையத்திற்கு சென்றனர்.

அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் சத்யா ஏற்கனவே கரூரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதும், கொடுமுடி அருகே பிரகாஷ் என்ற நபரை ஏமாற்றி பணம் பறித்ததும், 2012-ல் ராஜேஷ் என்பவருடன் நடந்த திருமணத்தில் சத்யாவிற்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

இதனை கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இவருக்கு புரோக்கர் தமிழ்செல்வி என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுபோல் சத்யா பல ஆண்களிடம் பழகி லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள தமிழ்செல்வியையும் தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.