Home செய்திகள் மதுவை சூப்பர் மார்க்கெட்டில் விற்க வேண்டும்… ஐ.டி. ஊழியர் தொடர்ந்த வழக்கு…!!

மதுவை சூப்பர் மார்க்கெட்டில் விற்க வேண்டும்… ஐ.டி. ஊழியர் தொடர்ந்த வழக்கு…!!

by Revathy Anish
0 comment

சென்னையை சேர்ந்த ஐ.டி ஊழியரான முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் டாஸ்மாக்கிற்கு பதிலாக மது பாட்டில்களை சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் எனவும், கள் விற்பனைக்கு போடப்பட்ட தடைகளை நீக்கி, கட்டுப்பாடுகளோடு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மது பாட்டில்களில் உள்ள விலையை விட கூடுதலாக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று ஐகோர்ட்டில் நடைபெற உள்ளது

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.