மதுவை சூப்பர் மார்க்கெட்டில் விற்க வேண்டும்… ஐ.டி. ஊழியர் தொடர்ந்த வழக்கு…!!

சென்னையை சேர்ந்த ஐ.டி ஊழியரான முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் டாஸ்மாக்கிற்கு பதிலாக மது பாட்டில்களை சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் எனவும், கள் விற்பனைக்கு போடப்பட்ட தடைகளை நீக்கி, கட்டுப்பாடுகளோடு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மது பாட்டில்களில் உள்ள விலையை விட கூடுதலாக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று ஐகோர்ட்டில் நடைபெற உள்ளது

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!