மனைவிக்கு தெரியாமல் வேறு திருமணம்… இளம்பெண் அளித்த புகார்… வாலிபர் கைது…!!

சென்னை கேளம்பாக்கம் சர்ச் தெருவில் பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளம் மூலம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுடன் பழகி, 2022 ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து இருவரும் திருநின்றவூர் பகுதியில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் இளம்பெண்ணின் பணம், நகைகளை கேட்டு கொடுமைப்படுத்திய பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் திடீரென வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து மனைவியுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த இளம் பெண் கேளம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஆம்ஸ்ட்ராங் வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சடைந்த அந்த பெண் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எனது கணவன் என்னை ஏமாற்றி விட்டு 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த குற்றத்திற்காக பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங்கை கைது செய்துள்ளனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!