பீடி இலைகள் கடத்த முயற்சி… வசமாக சிக்கிய இருவர்…30 கிலோ இலைகள் பறிமுதல்…!!

தூத்துக்குடி மாவட்டம் கடலோர பகுதிகள் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நள்ளிரவில் கல்லாமொழி கடற்கரை பகுதிக்கு வந்த லோடு வேன் ஒன்று வந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது 30 கிலோ எடை கொண்ட பீடி இலை கட்டுகள் இருந்தது.

இதுகுறித்து வாகனத்தை ஒட்டி வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் காரைக்குடியை சேர்ந்த விஜயகாந்த், நெல்லையை சேர்ந்த பாண்டியன் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் பீடி கட்டுகளை சட்ட விரோதமாக கடத்த முயன்றது தெரியவந்த நிலையில் போலீசார் அவர்கள் 2 பேரை கைது செய்தனர். இதனையடுத்து 30 கிலோ பீடி இலை, லோடு வேன், கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்த்தனர். பீடி இலைகளின் மதிப்பு 75 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!