வீட்டில் வைத்து கொடூர கொலை… பயங்கர ஆயுதங்களுடன் தப்பிய மர்மநபர்கள்… திண்டுக்கல் அருகே பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி வினோத்தை பிரிந்து சென்றுள்ளார். இதனால் அவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று வினோத் வீட்டில் இரவு உணவை சாப்பிட்டு கொண்டிருந்தபோது மர்மநபர்கள் 3 பேர் திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்தனர்.

இதனையடுத்து வினோத்தை அரிவாள், கத்தி கொண்டு சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். வினோத் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் மற்றும் சகோதரி அங்கு வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் கொலை வழக்கில் வினோத்திற்கு தொடர்பு இருந்துள்ளது. எனவே அதற்கு பழி தீர்க்க கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!