வாலிபர் கொடூர கொலை… விசாரணையில் சிக்கிய நண்பர்கள்… காஞ்சிபுரம் அருகே பரபரப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் ருத்திரகோட்டி மோகனப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். பட்டு ஜரிகை அடகு கடை நடத்தி வரும் இவர்களுக்கு தனுஷ் என்ற மகன் உள்ளார். பட்டதாரியான இவர் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக படித்து கொண்டிருந்தார். சம்பவத்தன்று நண்பர்களை பார்க்க செல்வதாக வெளியே சென்ற தனுஷ் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் என வந்தது.

இந்நிலையில் கோயம்பக்கம் அருகே உள்ள பாலாறு பகுதியில் வாலிபர் ஒருவரின் வலதுகால் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற வாலாஜாபாத் காவல்துறையினர் அந்த காலை மீட்டனர். இதனையடுத்து வாலிபரின் உடல் அப்பகுதியில் இருக்கிறதா என தேடி பார்த்தனர். அப்போது அப்பகுதியில் ஒரு இடத்தில் வாலிபரின் உடல் அழுகிய நிலையில் புதைந்து காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த வாலிபர் அய்யம் பேட்டையை சேர்ந்த தனுஷ் என்பது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கட்சியை ஆய்வு செய்தபோது தனுஷ் நண்பர் விஷ்வாவின் அவரது காரில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்து. அவரை பிடித்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

சம்பவத்தன்று விஷ்வா தனது நண்பர் சுந்தர் என்பவருடன் சேர்ந்து தனுஷை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும், உடலை பாலாறு அருகே புதைத்ததாகவும் தெரியவந்தது. இதனை கேட்ட போலீசார் சுந்தர் மற்றும் விஷ்வாவை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவர்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!

ரிஷபம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக அமையும்…! எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!