Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்கடலூர் சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!

by Revathy Anish
0 comment

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன்நகர் அருகே சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் இரவு மலட்டாறு பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் பேருந்து கவிழ்ந்து டிரைவர் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் பேருந்தில் இருந்த நடத்துனர், பயணிகள் உள்பட 22 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது காயமடைந்த அனைவரும் கடலூர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த ஓட்டுநர் ராஜாவை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.