சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன்நகர் அருகே சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் இரவு மலட்டாறு பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் பேருந்து கவிழ்ந்து டிரைவர் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் பேருந்தில் இருந்த நடத்துனர், பயணிகள் உள்பட 22 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது காயமடைந்த அனைவரும் கடலூர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த ஓட்டுநர் ராஜாவை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

Related posts

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!

ரிஷபம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக அமையும்…! எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!