மின் கட்டணத்திற்கு கண்டனம்… மாபெரும் ஆர்ப்பாட்டம்… தே.மு.தி.க. சார்பில் அறிவிப்பு…!!

தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் உடனடியாக விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் வருகின்ற 27-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், சார்பு அணி நிர்வாகிகள், விவசாய பெருமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!