நீதிமன்ற காவல் முடிவடையும் நிலை… நீதிபதி அளித்த தீர்ப்பு… 15 பேர் சிறையில் அடைப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளச்சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதான கவுதம் சந்த், பன்ஷிலால், சிவகுமார், கோவிந்தராஜ், விஜயா, ஜோசப், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சடையன், செந்தில், ஏழுமலை, ரவி ஆகிய 15 பேரின் காவல் நேற்று முடிவடைய இருந்தது.

இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த 15 போரையும் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிபதி ஸ்ரீராம் முன்பு காணொலி காட்சி வாயிலாக ஆஜர் படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி 15 பேருக்கும் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளர். அதன் அடிப்படையில் போலீசார் அவர்களை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Related posts

விமான சாகச நிகழ்ச்சி…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு…!!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!!