இப்படி ஆகும்னு நினைக்கவில்லை… முக்கிய குற்றவாளிகள் வாக்குமூலம்… சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மாதேஷ், கன்னுகுட்டி என்ற கோவிந்தராஜ் என 11 பேரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதேஷிடம் நடத்திய விசாரணையில் கடந்த 4 மாதங்களாக சென்னை கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்களான பன்சிலால், கவுதமிடம் மொத்தம் 9 பேரல் மெத்தனால் வாங்கியுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் 11,000 ரூபாய் என வாங்கிய 1 பேரலை 40,000 என விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தார். மேலும் பல மாவட்டங்களில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், முதல் விற்பனை செய்த கள்ளக்குறிச்சியில் உயிரிழப்பு நேர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

இதனையடுத்து கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி விஜயா பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததாகவும், போதையை அதிகரிக்க மெத்தனால் வாங்கி கலந்ததில் பலரும் உயிரிழந்து, கண் பார்வை இழந்து இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Related posts

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!