சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள்… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை… 5 இருசக்கர வாகனம் பறிமுதல்…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது சிறுவர்கள் சிலர் இருசக்கர வாகனம் ஓட்டுவதை பார்த்த அதிகாரிகள் அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையாது உறுதியானது. இந்நிலையில் 5 சிறுவர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வண்டியின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அங்கு வரவழைக்கப்பட்டு குழந்தைகளிடம் இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதி அளிக்க கூடாது எனவும், இதனால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரித்து அனுப்பியுள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நீதிமன்ற உத்தரவின் படி அபராதம் செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.

Related posts

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!

ரிஷபம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக அமையும்…! எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!