செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் இந்த 3 நாள் மாஞ்சோலைக்கு செல்லகூடாது… தடை விதித்த வனத்துறையினர்… சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு…!! Revathy Anish21 July 2024054 views திருநெல்வேலி மாவட்டம் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 21 (இன்று) முதல் 23ஆம் தேதி வரை மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஞ்சோலையில் வசிக்கும் மக்களை தவிர வேறு யாரும் அனுமதியின்றி வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பினை களக்காடு முண்டந்துறை காப்பகம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா வெளியிட்டுள்ளார்.