முன்னாள் கவுன்சிலர் கொலை… கொலையாளிகளுக்கு வலைவீச்சு… கடலூரில் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் வசிக்கும் முன்னாள் நகராட்சி கவுன்சிலரான புஷ்பநாதன் தற்போது அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் புதுவண்டிப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்மநபர்கள் சிலர் அவரை பின்தொடர்ந்து வழிமறித்துள்ளனர்.

இதனை பார்த்த புஷ்பநாதன் அங்கிருந்து தப்பித்து செல்வதற்குள் மர்மநபர்கள் அரிவாளை எடுத்து சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த புஷ்பநாதன் நடுரோட்டிலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் துணை சூப்பிரண்டு போலீஸ் பிரபு தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புஷ்பநாதனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கடலூர் அரசு மருத்துவமனை வளாகம் முன்பு கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் புஷ்பநாதனை கொலை செய்ததற்கான காரணம் குறித்தும், கொலையாளி யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!