விவசாயிகள் கொலை வழக்கு… சிக்கிய 2 வாலிபர்கள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒட்டன்குட்டை பகுதியில் வசித்து வந்த விவசாயி முத்துசாமி அவரது மனைவி சாமியாத்தாள் இருவரும் கடந்த ஆண்டு வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து 15 பவுன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதேபோல் கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னிமலை அருகே உள்ள ஒப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி துரைசாமி கவுண்டர் என்பவரும் கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த 2 கொலையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் நீலகிரி மாவட்டம் எருமாடு பகுதியை சேர்ந்த கண்ணன்(25), மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பொதிகை நகரை சேர்ந்த இளையராஜன்(28) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 6 1/2 பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது இவர்களை சென்னிமலை அழைத்து வந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!