தமிழகத்தில் முதல் வழக்கு… புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு… காவல்துறையினர் தகவல்…!!

நாடு முழுவதிலும் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்ட நிலையில் பல காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் முதன் முதலாக புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் உத்தமர் சாலையில் 2 வாலிபர்கள் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கரவாகனத்தில் வந்த 2 நபர்கள் அவர்களை வழிமறித்து மிரட்டி செல்போன்களை பறித்துக்கொண்டு சென்றனர்.

இதுகுறித்து அந்த வாலிபர்கள் ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகார் புதிய குற்றவியல் சட்டம் 304(2) என்ற சட்டப்பிரிவில் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கிற்கு நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டால் பழைய சட்டப்பிரிவுகளின் கீழ் தான் எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!