Home செய்திகள் கடலுக்கு சென்ற மீனவர்கள்… வலையில் சிக்கிய இலங்கை படகு… பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை…!!

கடலுக்கு சென்ற மீனவர்கள்… வலையில் சிக்கிய இலங்கை படகு… பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை…!!

by Revathy Anish
0 comment

நாகை வேதாரண்யம் சிறுதலைக்காடு பகுதியை சேர்ந்த ராமானுஜம் என்பவருக்கு சொந்தமான படகில் அவர் மற்றும் அதே ஊரை சேர்ந்த 7 மீனவர்களோடு மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அவர்கள் சிறுதலைக்காடு தெற்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது ஒரு படகு கவிழ்ந்த நிலையில் காணப்பட்டது. அதனை பார்த்த மீனவர்கள் கயிறு மூலம் கட்டி அதை கரைக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அவர்கள் வேதாரண்யம் கடலோர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த படகை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த படகில் மீன்பிடிக்கும் வலை மற்றும் என்ஜின் இல்லாமல் இருந்துள்ளது. அந்த படகில் எழுதிய எழுத்து மற்றும் அதன் தோற்றத்தை வைத்து பார்க்கும்போது அது இலங்கையை சேர்த்த படகு என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த படகு யாழ்ப்பாணம் கடற்பகுதியில் இருந்து காற்றின் வேகத்தால் இங்கு வந்ததா? கள்ளக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா? அல்லது வேறு யாரேனும் இந்த படகில் இங்கு வந்தார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.