Home செய்திகள் மாணவனை கட்டாயப்படுத்தி உல்லாசம்… தாய் அளித்த புகார்… இளம்பெண் போக்சோவில் கைது…!!

மாணவனை கட்டாயப்படுத்தி உல்லாசம்… தாய் அளித்த புகார்… இளம்பெண் போக்சோவில் கைது…!!

by Revathy Anish
0 comment

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் தூத்துக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுடன் பழகி வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அந்த பெண் மாணவனை கட்டாயப்படுத்தி அடிக்கடி அவர் வீட்டிற்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளார். மேலும் இளம்பெண் மாணவனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியுள்ளார்.

அதற்கு மாணவன் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் அவர் படிக்கும் கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் மாணவனை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து மாணவனின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்த இளம்பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.