சமாதானம் செய்ய சென்ற நண்பர்கள்… தகராறில் வாலிபர் கொலை…திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள மேட்டுத்தெரு பகுதியில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேலப்பச்சேரி பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத்(21) சண்முகராஜ்(24) என இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் மதுரை கருப்பாயூரணி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பேசாமல் வின் விரோதத்தோடு இருந்துள்ளனர்.

சம்பவத்தன்று ராஜேந்திர பிரசாத் மற்றும் சண்முகராஜ் இருவரும் கார்த்திக்கிடம் சமாதானம் பேசுவதாக கூறி அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ராஜேந்திர பிரசாத் கார்த்திக்கை அடித்ததால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராஜேந்திர பிரசாத்தின் தோள் பட்டையில் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து மயங்கிய அவரை அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ராஜேந்திர பிரசாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கார்த்திக் மற்றும் சண்முகராஜ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!