Home செய்திகள் 21-ஆம் தேதியில் இருந்து 31வரை… தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்… ரயில்வேத்துறை அறிவிப்பு…!!

21-ஆம் தேதியில் இருந்து 31வரை… தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்… ரயில்வேத்துறை அறிவிப்பு…!!

by Revathy Anish
0 comment

சென்னை தாம்பரம் ரயில் பாதை மேம்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை-தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் 22ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை விழுப்புரம் வரை இயக்கப்படவுள்ளது. அதே போல் எழும்பூர்-திருச்சி எக்ஸ்பிரஸ், எழும்பூர்-காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் 23-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1 வரை செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படவுள்ளது.

இதனையடுத்து எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் 23ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக சேலத்திற்கு சென்றடையும். இதைத்தொடர்ந்து நாகர்கோவில்-தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதய எக்ஸ்பிரஸ் வருகின்ற 22ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. ஹைதராபாத்-தாம்பரம்-ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.