கள்ளக்குறிச்சி செய்திகள் மாவட்ட செய்திகள் தப்பியோடிய கள்ளச்சாராய வியாபாரி… கையும் களவுமாக பிடித்த போலீசார்… 110 லிட்டர் சாராயம் பறிமுதல்…!! Revathy Anish6 July 2024035 views கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் வசித்து வரும் ஆறுமுகம் யாருக்கும் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்ய சென்ற போது அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆறுமுகத்தை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கேரளா அலங்குளத்தில் இருப்பது தெரியவந்த நிலையில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பதுங்கி இருந்த ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து கச்சிராயபாளையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவரை கைது செய்த போலீசார் அவர் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் கள்ளசாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளார்.