தப்பியோடிய கள்ளச்சாராய வியாபாரி… கையும் களவுமாக பிடித்த போலீசார்… 110 லிட்டர் சாராயம் பறிமுதல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் வசித்து வரும் ஆறுமுகம் யாருக்கும் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்ய சென்ற போது அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆறுமுகத்தை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் கேரளா அலங்குளத்தில் இருப்பது தெரியவந்த நிலையில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பதுங்கி இருந்த ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து கச்சிராயபாளையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவரை கைது செய்த போலீசார் அவர் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் கள்ளசாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளார்.

Related posts

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!

ரிஷபம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக அமையும்…! எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!