வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் உல்லாச வீடியோ… கள்ளக்காதலி அளித்த பரபரப்பு புகார்…!!

கோவை நகை பட்டறை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் நரசிம்மராஜ் அரசு என்பவர் கணவனை பிரிந்து வாழும் 33 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது நரசிம்ம ராஜ் அரசு தனது செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி நரசிம்மராஜ் அரசு கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை தவறுதலாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்சில் வைத்துள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இது குறித்த அந்த பெண்ணிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த அந்த பெண் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் நரசிம்மராஜ் அரசு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!