கம்பி அறுக்கும் இயந்திரத்தில் தங்கம்… ஷாக் ஆன அதிகாரிகள்… விமான நிலையத்தில் பரபரப்பு…!!

திருச்சி விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் வந்தடைந்தது. இதில் பயணித்து திருச்சி வந்தவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமாக சோதனை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பயணி ஒருவரின் பைகளை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர் உடமைகளில் கம்பி அறுக்கும் இயந்திரத்தில் 1666 கிராம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 19 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!