அரசே ஏற்று நடத்த வேண்டும்… மாஞ்சோலை தொழிலாளர்கள் தீர்மானம்… அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை…!!

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, போன்ற பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறவுள்ள நிலையில் அவர்களுக்கு நிலம், வீடு, வேலைவாய்ப்பு போன்றவை வழங்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை, வருவாய்த்துறை, தேயிலை நிறுவன அதிகாரிகள், நலத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர்.

Related posts

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!