மனைவியை இழந்த துக்கம்… போலீஸ் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிரண்குமார் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். திருச்செங்கோடு எளையாம்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு இவரது மனைவி ரேணுகாதேவி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் செல்வராஜ் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற திருச்செங்கோடு போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!