Home மாவட்ட செய்திகள்வடக்கு மாவட்டம்கள்ளக்குறிச்சி ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம்… மனைவியை அடித்து கொன்ற கணவன்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம்… மனைவியை அடித்து கொன்ற கணவன்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

by Revathy Anish
0 comment

கள்ளக்குறிச்சி மாவட்டம் அ. குரும்பூர் பகுதியில் வசித்து வந்த வீரமணி என்பவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். கூலி தொழிலாளிகளாக இவர்கள் சில தினங்களுக்கு முன்பு கேரளாவுக்கு சென்று வேலை பார்த்து வந்த நிலையில் தெய்வானைக்கு கேரளாவை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த வீரமணி தெய்வானையை கண்டித்ததாக தெரிகிறது.

இதனையடுத்து இவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போதும் தெய்வானை அந்த நபருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வீரமணி தெய்வானையை வீட்டில் இருந்த கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதனால் தெய்வானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வீரமணி அவரது சகோதரரின் ஆலோசனையுடன் தெய்வானை தற்கொலை செய்து கொண்டதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாய்வானையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உடலில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் வீரமணியிடம் நடத்திய விசாரணையில் அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்க்கொண்டுள்ளார். மேலும் வீரமணி மற்றும் அவரது சகோதரர் சதீஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.