சாக்லேட் கொடுப்பதாக கூறி 7 வயது சிறுமிக்கு தொல்லை… தொழிலாளி போக்சோவில் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் வசித்து வரும் செல்வக்குமார் சம்பவத்தன்று குடிபோதையில் அவர் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை சாக்லேட் கொடுப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது செல்வகுமார் வீட்டில் அவரது மனைவியும், 2 மகள்களும் வெளியே சென்றிருந்ததால் அவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதை கேட்டு அச்சமடைந்த சிறுமி அங்கிருந்து சென்று அவரது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் கிராம மக்கள் செல்வக்குமாரின் வீட்டை சுற்றிவளைத்து அவரை மடக்கிப் பிடித்தனர். இதனை அடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளித்துள்ளனர். அப்போது காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் போலீசார் வழக்கு பதிவு செய்வதில் தாமதித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!