Home செய்திகள் சூடு பிடிக்கும் கொலை வழக்கு… அதிமுக கவுன்சிலர் கைது… கூவம் ஆற்றில் செல்போன்கள்…!!

சூடு பிடிக்கும் கொலை வழக்கு… அதிமுக கவுன்சிலர் கைது… கூவம் ஆற்றில் செல்போன்கள்…!!

by Revathy Anish
0 comment

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் ஹரிஹரன் என்பவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டுவதற்கு பயன்படுத்திய செல்போன்களை உடைத்து கூவம் ஆற்றில் வீசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கைதாகி உள்ள அருள் என்பவரின் செல்போன் மற்றும் ரவுடிகள் பயன்படுத்திய செல்போன்களை ஹரிதரன் உடைத்து திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அறிந்த போலீசார் ஸ்கூபா டைவிங் வீரர்களின் உதவியுடன் மொத்தம் 5 செல்போன்களை மீட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் சோதனை செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.