கணவன் கொடூர கொலை… மனைவி உள்பட 2 பேர் கைது… தஞ்சை அருகே பரபரப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அடுத்துள்ள சாத்தனூர் பகுதியில் மாரிமுத்து(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கருத்துவேறுபாடு காணரமாக முதல் மனைவியை பிரிந்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த பிரியா(21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி மாரிமுத்து, பிரியா மற்றும் மாரிமுத்துவின் முதல் மனைவியின் சகோதரரான மணிகண்டன் ஆகியோர் மாரிமுத்து வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரியா மற்றும் மணிகண்டன் இருவரும் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மாரிமுத்துவை வெட்டி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மாரிமுத்து உடலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் புதைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து மாரிமுத்து தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய பிரியா, மணிகண்டனை மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!

ரிஷபம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக அமையும்…! எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!