கப்பல் விபத்தில் சிக்கிய கணவர்… மீட்டு தர கோரிக்கை… மனைவி தர்ணா போராட்டம்…!!

துபாயில் இருந்து எண்ணெய் ஏற்றி சென்ற கப்பல் ஒன்று ஓமன் அருகே உள்ள ஏடன் துறைமுகம் அருகே கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் மொத்தம் 29 பேர் சிக்கிய நிலையில் அதில் 10 பேரை மீட்டுள்ளனர். இதனையடுத்து கடலில் மாயமான 19 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் கடலில் மாயமான ஒருவர் கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியை சேர்ந்த தனஞ்செயன் ஆவார். அவரை மீட்டு தரக்கோரி அவரது மனைவி எழிலரசி கடந்த இரண்டு நாட்களாக ஆட்சியில் அலுவலகத்தில் மனு அளித்து வந்தார்.

ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கிய கணவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் வேதனை அடைந்த அவர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனஞ்செயனை மீட்டு தரக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் எழிலரசியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் அளித்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!