நள்ளிரவில் தீப்பிடிக்கும் குடிசைகள்… கடலூர் அருகே பரபரப்பு… பொதுமக்கள் அச்சம்…!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள கல்குணம் கிராமத்தில் சில நாட்களான அப்பகுதியில் குடிசை வீடுகள் வைக்கோல்போர் ஆகியவை நள்ளிரவில் திடீர் திடீரென தீப்பிடித்து எரிகிறது. இதுவரை கிராமத்தில் 5 குடிசை வீடுகள், 3வைக்கோல் போர் ஆகியவை தீப்பிடித்து இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் யாரேனும் நள்ளிரவில் குடிசைகளுக்கு தீ வைக்கிறார்களா என்று கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது தள்ளுவண்டி கடை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்தது தீயணைப்புத் துறையினர் இருந்து கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். ஆனாலும் தள்ளுவண்டி கடை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்நிலையில் மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் அதிகாரி ராஜாராம் தீ விபத்திற்கான காரணம் குறித்து விரைவில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related posts

விமான சாகச நிகழ்ச்சி…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு…!!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!!