செய்திகள் சென்னை மாநில செய்திகள் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்… மிரட்டல் விடுத்த மர்மநபர்… மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு…!! Revathy Anish4 July 202407 views சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் ஒருவர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையறிந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாயுடன் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்து ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளிடமும் சோதனை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை நடத்தியத்தில் அந்த மிரட்டல் புரளி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ரயில் நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.