உலக செய்திகள் செய்திகள் இந்திய-வங்காளதேசம்… பிரதமர் மற்றும் ராணுவ தளபதியோடு ஆலோசனை… இந்திய கடற்படை தலைவர் பயணம்…!! Revathy Anish4 July 20240119 views இந்திய கடற்படை தலைவரான அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்த அவர் இரு நாட்டு கடற்படைக்கு இடையேயான கடல்சார் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து அவர் டாக்காவில் இருந்து வங்காளதேச ராணுவ தலைமையகத்திற்கு சென்று ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர் உஸ்-ஜமானை சந்தித்து இந்திய-வங்காளதேசத்தில் நீண்டகால உறவுகள் குறித்தும், ஆயுதப்படைகளுக்கு இடையே கூட்டுப்பயிற்சிகளில் கூடுதல் வழிகள் குறித்து விவாதித்துள்ளனர். மேலும் இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினர்.