சிறுவன் உள்பட 2 பேர் கடத்தல்… 2 கோடி கேட்டு மிரட்டும்… போலீசாரின் அதிரடி சம்பவம்…!!

மதுரை மாவட்டம் எஸ்.எஸ். காலனி பகுதியில் 14 வயது சிறுவன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆட்டோவில் வழக்கம்போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் ஆட்டோ டிரைவர் மற்றும் சிறுவனை கடத்தியுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் தாய் மைதிலிக்கு தொடர்பு கொண்டு உங்கள் மகனை கடத்தியுள்ளதாகவும், 2 கோடி ரூபாய் கொடுத்தால் திருப்பி ஒப்படைப்பதாக கூறியுள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மைதிலி உடனடியக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த உடனடியாக தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் போலீசார் நெருங்குவதை அறிந்து அச்சமடைந்த கடத்தல் கும்பல் சிறுவன் மற்றும் ஆட்டோ டிரைவரை புக்கோட்டை 4வழி சாலையில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும் சிறுவன் மற்றும் ஆட்டோ டிரைவரை பாதுகாப்பாக மீட்ட போலீசார் கடத்தல் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!