நில மோசடி வழக்கு… சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணை… அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பு…!!

100 கோடி நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. நிர்வாகி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். அவர்களது வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு அம்மன் நகரில் வசித்து வரும் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகி கவின் வீட்டில் சோதனை செய்தனர். இதனையடுத்து கரூர் மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி உறுப்பினர் பசுபதி, செந்தில், என மொத்தம் 7 பேரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இது அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!