பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம்… காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல்… போலீஸ் பாதுகாப்பு…!!

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர் சின்னத்திருப்பதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியனூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் கல்லூரிக்கு சென்ற மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.

இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியும் விசாரணைக்கு கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு இரு வீட்டு பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பெண் பெற்றோருடன் செல்ல மறுத்ததால் அவரை காதலனோடு சேர்த்து வைத்தனர்.

இந்நிலையில் அந்த கல்லூரி மாணவனுக்கு செல்போன் மூலம் சிலர் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடியின் வீட்டிற்க்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!